செல்லகண்ணே கண்மணியே
செல்லகண்ணே!! கண்மணியே..
பனிக்குடக் குளத்தில்
தவழும் குலக்கொழுந்தே!!
அதுவரையில் அருந்தாத உணவும்
திகட்டும் உணவும் உட்செல்லும் .
என் குழந்தையின் ஊட்டத்திற்கு..
வெளியேற்றிய பின்னும் , துவண்ட போதும்
நீ உணவு பந்தை எட்டி தள்ளுவதாய்
நினைத்து உண்ண தோன்றும் ..
பார்த்து பார்த்து நானும் , அவரும்
காத்து கிடக்கிறோம் .. என்று உன்னை
எங்கள் கைகளில் ஏந்த போகிறோம் என ..
- வைஷ்ணவ தேவி