கண்ணீர் வழி

ஒளிஆடி முன் நின்று
ஆடாமல் அசையாமல்
ஊர்ந்திடும் பார்வையில்
ஒளிந்திட்ட நீர்திரள்
ஒலிகொண்டு முனுமுனுக்க
வலிகொண்ட நெஞ்சம்தாம்
வழியின்றி முடமாக.....

பிழையொன்றும் செய்யாமல்
பிழைக்காமல் பழிக்குள்ளே
பிடிபட்ட காரணம்தான்
பிடிபடாமல் மறைவாக.....

மௌனத்தின் திரைக்குள்ளே
விழிமூடி சாய்ந்தாட
முன்னது காட்சியாய்
நிழலாக முன்னாட
நீர்திரள் கசிந்தோடி
விடுதலை செய்வதென்ன....
விழிநீரோடு பூட்டிய
வலிகளும் கரைவதென்ன....

எழுதியவர் : ராணிகோவிந் (27-Dec-17, 1:33 pm)
சேர்த்தது : ராணிகோவிந்த்
பார்வை : 82

மேலே