உணர்வுகளில் பூத்த ஓராயிரம் மலர்களும்
நிலவு பொழிந்த இரவினில்
உன்னுடன் கைகோர்த்து நடந்த
நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்
உணர்வுகளில் பூத்த ஓராயிரம் மலர்களும்
ஒன்றொன்றாய் உதிர்ந்த பின்
வெறுமையில் இன்று நான்
இலையுதிர் காலத்துத் தோட்டத்தைப் போல் ....