மலரெழுதிய மாலைப் புத்தகம்நீ

மலரெழுதிய மாலைப் புத்தகம்நீ
மௌனம்பாடும் புன்னகை ராகம்நீ
கண்களில் காதல் காவியம்நீ
கற்பனைக்கு அந்தி வானம்நீ

--மூன்று சீர்களால் நான்கு அடிகளால் பல தளைகள் பெற்ற
வஞ்சிப்பாவின் பாவினமான வஞ்சி விருத்தம் இப்பா .
எல்லோருக்கும் எழுத எளிது .மூன்று மூன்று சொற்களால்
நான்கு வரியில் கவிதை அமையுங்கள். அது வஞ்சி விருத்தமாகத்தான்
இருக்கும் . avalokitam அவலோகிதம் என்ற யாப்பு மென்பொருள்
சைட்டில் இட்டு சரிபார்த்துக் கொள்ளவும்.

எழுதியவர் : கவின் சாரலன் (30-Dec-17, 9:45 am)
பார்வை : 113

மேலே