விதை

விதை

விதையொன்று விளை நிலத்தில்
விதைத்து விட்டு

எதிர் பார்த்து காத்திருக்க

அது
எழுந்து நிற்க தள்ளாடும்

கைகொடுக்க எதிர்பார்த்து
இவன்

பக்கத்தில் விழுந்து
கிடந்த களை விதை
எல்லாம்
எழுந்து நிற்க !

இது மட்டும்
மெளனமாய் மயங்கி
கிடக்க

விடாமல் தண்ணீர்
தெளித்து, சுற்றி
வர மண்ணை அணைத்து
கண்ணெல்லாம் அதன்
மீது

கடைசி வரை
இடை விரித்து
குடை விரிக்காத
இதனை கண்டு

சோர்ந்து போய்
என்னவென்று விசாரித்தால்
அவைகள் விஞ்ஞானத்தில்
விளைவிக்கப்பட்ட பழத்தில்

வந்து விட்ட வித்துக்களாம்
உயிர் சத்து கிடையாதாம்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (4-Jan-18, 9:59 am)
Tanglish : vaithai
பார்வை : 292

மேலே