சிவாஜி எம்ஜியார் எஸ்எஸ்ஆர்

சிவாஜி எம்ஜியார் எஸ்எஸ்ஆர்
வெண்பா
அண்ணாவு டன்பலரும் எண்ணா திணைந்தாராம்
அண்ணன் சிபிசிற் றரசுசம்பத் --- அண்ணன்கள்
தட்சிணாநா ராயண் நடராஜன் சண்முகம்
கட்டைபாட்டு ராமசாமி யும்

எம்ஜியார்எஸ் எஸ்ஆர்சி வாஜிமுத்தூண் அம்மட்டில்
தம்பிகளாம் அண்ணாவின் நம்பிக்கை --- நம்நாட்டில்
பாடுபட்டு வீடுவிட்டுக் கட்சிவளர்த் தார்எங்கும்
நாடுபார்த்த உண்மை இது

இவரு அடைப்பே ருவைத்துக் கவர்ந்தார்
தவறா ததிலே வளர்ந்துத் --- தவழ்ந்து
திராவிடப் பேச்சால் மராமத்துச் செய்ய
திராவிடம் முன்னேற்ற மாம்

கட்சிக் கடவுளை இல்லையென யாரிடமும்
அட்டூழி யம்பேசத் தேடினராள் --- கட்சி
கணேசன் மணமாய் அநேகசாமி வேண்ட
அநேகரும்க லாட்டாசெய் தார்

முத்தூண் சிவாஜியைப் பத்தாம் பசலியென்றார்
ஒத்தனிலா தெத்தனென்றார் உண்மையிது --- எத்தனையும்
சொல்லி திருப்பதிக ணேசனாம் எல்லோர்க்கும்
தள்ளினார்சி வாஜிகட்சி யை

சிவாஜிபோக எம்ஜியார்மேல் மக்கள் அவாவில்
தவறாமல் பாசம் செலுத்தக் --- கவானாகக்
கட்சித் தலைவர்க்கு ஓட்டுவங்கி எம்ஜியாராம்
நட்பாக அண்ணாச்சொன் னார்

சிவாஜியும்எஸ் எஸ்ஆர் தவறா இரட்டை
சிவாஜியொரு சக்ரம் கழன்றிடப் --- பாவமாம்
எஸ்எஸ்ஆர் புஸ்வாண மாய்மாறிப் போனாரு
எஸ்எஸ்ஆர் ஓசையில் லை

அண்ணாவின் தோட்டத்தில் சொன்னார் கனியிரண்டு
ஒன்றுத் தவறி விழக்கீழே --- இன்னொன்றை
என்இதயத் தில்பத்தி ரப்படுத்த எம்ஜியார்தான்
என்இதயத் தின்கனிஎன் றார்!

எழுதியவர் : பழனி ராஜன் (4-Jan-18, 5:04 pm)
பார்வை : 205

மேலே