எனக்கான அதிசயம்
விடியாத இரவுகளில்
தலையணையோடு
பேசிக்கொள்ளும்...
தனிமை சுகமானது.....
யார் பேசும்
வார்த்தைகளும் கேட்காத
இரவின் நிசப்தம்...
இனிமையானது....
சுவர்க்கடிகாரம் மட்டும்
என்னோடு
சுவாசித்துக் கொண்டிருக்கும்..
அது சுகமானது....
அந்த கடிகார முட்கள் நகரும்
ஒவ்வொரு இடைவெளியும்
உன் நினைவில் என் மனம்
தவித்துக் கொள்ளும்...
அது மிக அழகானது...
எங்கோ நீ இருந்தாலும்
உன்னிதயம் மட்டும் ..
என்னுடனே துடித்துக்
கொண்டிருக்கும்..
அது அதிசயமானது.....