இருட்டை விலக்கு

அன்புக்கு அணைபோட்டு
அகத்தில் அழுக்காய் படிந்திருக்கும்
கொடிய கோபத்தை விலக்கு!

உள்ளொன்று வைத்து
புறமொன்றைப் பேசும்
உள்ளமதை விலக்கு!

கொழுந்துவிட்டு எரியும்
பொறாமைத் தீயை
புன்னகையால் விலக்கு!

நட்பிடம் வஞ்சம் செய்து
நடிக்கும் நயவஞ்சகர்களை விலக்கு!

பெண்களை இழிவாய் நினைக்கும்
ஆணென்ற ஆணவம் விலக்கு!

மதம் என்ற போர்வையில்
மண்டிக் கிடக்கும் மாசுகளை விலக்கு!

புறத்தில் விளக்கேற்றி
புண்ணியங்கள் சேர்த்து பயனில்லை,
இருளில் மூழ்கிக் கிடக்கும்
அகத்தில் விளக்கேற்று,
புன்னகை மனதில் தோன்றும்,
புறம் வெளிச்சமாகும்!
புன்னகை மனதில் தோன்றும்,!

இறைவனை வணங்கி
இருட்டை விலக்கு
இன்பம் பெறலாம்.!

எழுதியவர் : ஒப்பிலான்.மு.பாலு (12-Jan-18, 9:53 pm)
சேர்த்தது : முபாலு
பார்வை : 52

மேலே