காதல்

வீசும் தென்றலில் மென்மை இல்லை
இன்பம் கூட்டவில்லை-காயும்
நிலவில் ஒளி இருந்தும் குளிரில்லை
மல்லிகைப்பூவில் மணமில்லை
குயில் பாட்டில் இனிமை இல்லை
மயில் ஆட்டத்தில் அழகுமில்லை
என்னவளே இணைபிரிந்த நீ
இன்னும் என்னுடன் கூடவில்லை
நம் ஊடலை மறந்து என்னை மன்னித்து
என் இதைய வீணையே நீயாவாய்
நீ வாராவிடில் தந்திகள் அருந்த
வீணைதான் நான் -வந்திடுவாய்
என்னவளே நம் வாழ்வில் மீண்டும்
வசந்தம் மலரட்டும்,குயில் பாடட்டும்
மயில் தொகை விரித்தாடட்டும்
தென்றல் வீசட்டும் நம்மை சேர்க்கட்டும்
இதய வீணையை மீட்ட வந்திட மாட்டாயோ
என் வினைகள் அத்தனையும் மறந்து
என்னை மன்னித்து.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Jan-18, 4:33 pm)
Tanglish : kaadhal
பார்வை : 161

மேலே