காதல்- ஏமாற்றம்

நீயேதான் நான் தேடிய
ஆணழகன் என் காதலன்
என்று உன்னை மனதில் வரித்தேன்
உந்தன் ஒவ்வொரு அசைவிலும்
என் மனதை பறிகொடுத்தேன்
நீ எழுதி அனுப்பிய ஒவ்வொரு
மடலிலும் மல்லிகைப்போல் நம்
காதல் மணம் பரப்புவதாய் இன்று வரை
எண்ணி மகிழ்ந்திட - இதோ என் முன்னே
என்னைப்பார்த்து எள்ளி நகையாடுதே
இந்த உந்தன் இன்றைய மடல், அதில்
நம் காதல் வெறும்' கானல்' என்று
மூன்றெழுத்தில் அதற்கொரு
முற்றுப்புள்ளி வைத்தாய் - நான் தான்
பேதைமைகள், உன் காதலை நிஜம்
என்று நினைத்து கற்பனையில் வளர்ந்தேன்
நீ எழுதிய காதல் மொழியெல்லாம்
தண்ணீரில் எழுதிவைத்த வெறும்
'ஆசை பொய்மொழிகள்' என்று
புரிகிறது இப்போது இந்த
பெண் எனக்கு - 'பெண் புத்தி பின் புத்திதான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Jan-18, 8:52 am)
பார்வை : 94

மேலே