ஆறுவது சினம்

பிரச்சனைகளையே
பானைகளில்
ஏற்றி வைக்கிறோம்
கொதிப்பதெல்லாம்
எண்ணங்களும்
உணர்ச்சிகளும்
மட்டும்தான்
ஆராய்ந்தெடுத்த
அறிவுக் கரண்டிகளால்
அவரவர் கருத்துக்களும்
வாதங்களும்
தீய்ந்து விடாமல்
அடிக்கடி
துழாவிக்
கொண்டிருந்தாலும்
சிக்கல்களும்
பகைகளும்
பொங்கிக்
கொண்டிருக்கத்தான்
செய்கின்றன
தீர்வுகளை சமைத்து
எடுக்க வேண்டுமென்றால்
ஆறவைக்கத்தான்
வேண்டும்
எம் சினத்தை...

எழுதியவர் : சிவநாதன் (24-Jan-18, 11:38 pm)
சேர்த்தது : சிவநாதன்
பார்வை : 177

மேலே