நினைவெல்லாம் நீயே

மறக்க நினைக்கும் நேரமெல்லாம்
நினைவே நீயாகிறாய்
எழுத நினைக்கும் நேரமெல்லாம்
கவி வரிகள் நீயாகிறாய்
அழுகின்ற நேரமெல்லாம்
கண்ணீர்த் துளி நீயாகிறாய்
புன்னகைக்குள் புதையுண்டால
இமைகளுள் நீ வருகிறாய்
நடந்தால் வழித் துணையாகிறாய்
இருந்தால் இம்சைகள் செய்கிறாய்
தூங்கினால் தூக்கம் பறிக்கிறாய்
இத்தனையும் நீயாக
ஒன்றிக் கிடக்கையில்
எங்கே தாெலைத்தேன் என்று
ஏமாந்து பாேய் விட்டேன்
எனக்குள் தேடாமல்
நினைவெல்லாம் நீயே

எழுதியவர் : அபி றாெஸ்னி (27-Jan-18, 7:30 am)
Tanglish : NINAIVELLAM neeye
பார்வை : 1081

மேலே