குலத்தளவே யாகுங் குணம் – மூதுரை 7

நேரிசை வெண்பா

நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே யாகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே யாகுங் குணம். 7 - மூதுரை

பொருளுரை:

”நீரிலுள்ள அல்லி மலரானது நீர் நிலையிலுள்ள நீரின் உயரத்தின் அளவாக இருக்கும்.

ஒவ்வொருவரின் நுண்மையான அறிவு தான் கற்றுத் தெளிந்த நூல்களின் அளவாகவே இருக்கும்.

தான் அடைந்த பொருட்செல்வம் முற்பிறப்பில் தான் செய்த புண்ணியத்தின் அளவாகவே இருக்கும்.

அதுபோல, அவரவர் குணம் தான் பிறந்த குடும்ப பரம்பரை அளவாகவே இருக்கும்”.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Jan-18, 5:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 212

மேலே