விட்டில் பூச்சிகள்---அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர் விருத்தம் :


பசும்புல் உறங்கும் வெண்பனிப்போல்
*****பார்க்கும் முகத்தில் தூய்மையேற்று
அசுத்தம் மனத்தின் ஆழ்மறைத்தே
*****ஆட்சி அமருந் தீயோர்கள்
பசுந்தோல் அணிந்தப் புலிகளென்று
*****பகுத்த றியாதே மாற்றத்தால்
பொசுங்கும் மனித உயிர்களிங்குப்
*****புதிய விட்டில் பூச்சிகளே...

ஈன்ற உறவின் நூலறுத்தே
*****இளந்த ளிரெழில் பூக்கள்கண்
தோன்றும் தீய வண்டினங்கள்
*****தூண்டும் காதல் மோகத்தில்
மீன்மேல் துள்ளி ஆற்றுநீரில்
*****வீழ்தல் போன்று வலைவீழ்ந்து
தேன்மீ தெறும்பாய் மொய்த்தழிப்போர்
*****சிறையில் கந்தல் ஆவாரே...

கண்ணில் பாசம் நெஞ்சத்தில்
*****கனலாய்த் தெளிக்கும் விசம்வைத்துப்
புண்ணின் மருந்தாய்த் துணைநின்று
*****புதைம ணலுக்குள் தள்ளிவிட்டுக்
கண்ணீர்க் குடிக்கும் சொந்தங்கள்
*****காட்டும் பொய்மை நேசத்தின்
உண்மை விளங்கா திதயங்கள்
*****உறவின் நெருப்பால் கருகிடுமே...

எழுதியவர் : இதயம் விஜய் (30-Jan-18, 7:48 pm)
பார்வை : 168

மேலே