பாசம்

ஐயிரண்டு திங்களாய் - உன்

அகத்தினிலே தாங்கி
அகிலம் காண வழி சமைத்த
அன்னையே......

அன்பு காட்டி
அரவணைக்கும் வேளையிலே - தனை
தனியாய் விட்டதினால்
தினம் அழைக்கின்றான் உன்னையே....

ஆறுதல் பல கூறி
அர்த்தங்கள் பல சொல்லி
ஆயிரம் உறவுகள்
அரவணைக்க - அவன்
அருகில் இருந்தாலும்
அந்தனைக்கும் மத்தியிலே
தினம் அழைக்கின்றான் உன்னையே...

பாலோடு பகிர்ந்தது - நீ
பாசத்தை மட்டுமல்ல - நற்
பண்புகளை (யும்) ஊட்டியதால் - அவன்
பாரினிலே பெற்ற புகழ் அத்தனையும் - உன்
பாதம் சேர்ப்பதற்காய்
தினம் அழைக்கின்றான் உன்னையே...

பால பருவத்திலே
பாதி வழியினிலே
பரி தவிக்க விட்டு - நீ
பரலோகம் சென்று
பல வருடம் ஆனாலும் - தான்
பயணிக்கும் வழிகளிலே
பக்க துணை நீயிருப்பாய் என நம்பி
பாசத்துடனே தினம் அழைக்கின்றான் உன்னை.....

எழுதியவர் : (31-Jan-18, 11:50 am)
Tanglish : paasam
பார்வை : 1637

மேலே