அம்மா ஒரு தெய்வம்
துன்பங்களையும்
கொடுமைகளையும்
சகித்து கொண்டே
வாழ்ந்துவிட்டாள்
தாய்வீடு பக்கமிருந்தும்
உறவினர்கள் அருகிலிருந்தும்
உதவி என்று போகாமலே
உன்னதமாகவே வாழ்ந்துவிட்டாள்
கட்டியவனின் பேச்சுக்கு
எதிர்ப்பேச்சு பேசாமலே
பசியும் பட்டினியுமாக வாழ்ந்துவிட்டாள்
பத்தினிமார்களின்
வரிசையில்
தனக்கொரு இடம் வேண்டுமென்பதற்காக
அல்ல தன் குழந்தைகளின்
எதிர்காலத்தை இனிமையாக்க
நினைத்தே தியாக வாழ்க்கை
வாழ்ந்தாள் அதோ அந்த தாய்...