அம்மா

அம்மா

உருவமாக நான் உருவாகும் முன்னமே எனை
உயிராய் காத்தவள்
..... அம்மா.....


சிறு முல் ஒன்று
என் பாதம் கிழித்தது
இதயம் நொருங்கினாள்
......அம்மா......


ஒரு பிஞ்சு விரல்
அவள் தேகம் தீண்டியதில்
சிலிர்த்தெழுவாள்
....அம்மா.....

அவள் உள்ளங்கை அளவே இருக்கும் அவள் உயிரை
உலகமாய் நினைத்து
உயிர் விடுவாள்
.....அம்மா......

முனகல் சத்தம் கேட்டால் கூட
தூங்கமாட்டாள்
முத்த மழை பொழிந்து
எனை உறங்க வைப்பாள்
......அம்மா.......

எத்தனை உறவு இருந்தென்ன
நீ இன்றி எதுவும் உறவாகாதே
உன் உறவு யாருக்கும் ஈடாகாதே
உலகமே உடனிருந்தும்
உதறிவிட்டு
உன் அருகாமையை மட்டுமே
கேட்டிடுதே என் இதயம்.

மீண்டும் ஒரு வாய்ப்பில்லை என அறிந்தும் எனை சுமந்த
உன் கருவறையை ஒருமுறை
தரிசிக்க துடிக்கிறேனே....

உனை தொழுது வணங்குகிறேனே
.... அம்மா.....

எழுதியவர் : கிருத்திகா.à®… (1-Feb-18, 1:13 pm)
Tanglish : kavithai
பார்வை : 136

மேலே