தாயின் சிறந்த கோவிலும் இல்லை

கார் நனைக்கும் முன்பே
குடையாகி காப்பாள்,
கதிரவன் வாட்டும் முன்பே
திரையாகி காப்பாள்,
கடுங்குளிர் தாக்கும் முன்பே
ஆடையாகி காப்பாள்

தாயில்லாமல் வாழ்பவர்கள் சில பேர்,
தாயிருந்தும் மதிக்காதவர்கள் சில பேர்,

அந்த மதியற்றவர்களின் நானும் ஒருவன்,
அந்த கடவுளை வணங்காத மடையன்,
அவள் இருக்கும் குயிலாய் வாழ்ந்தேன்

உள்ளங்கை ஆயுள் ரேகை தேய்ந்தாலும்
உயிர் உள்ளவரை எனக்காக வாழ்ந்தாள்,

இருக்கும் வரை அவள் தியாகம் தெரியாது,
இறந்தபின் அவளை போற்றி பயனேது,

காக்கைகள் நடுவில் குயிலானேன்,
குரலை கேட்க ஆளில்லா அனாதையானேன்,

என் வாழ்வின்
அனுபவதில் சொல்கிறேன்,
அகிலத்தில் அவள் உள்ளவரை,
அவள் பாதம் தொட்டு வணங்கிடு.

எழுதியவர் : செநா (2-Feb-18, 9:10 am)
சேர்த்தது : செநா
பார்வை : 2897

மேலே