நெஞ்சில் குடியமர்ந்தாய்

தழைய தழைய குழல் பின்னலிட்டு
நுழைய நுழைய மலர் சொருகிவிட்டு
வருடி வருடி மெல்ல தழுவி விட்டு
திரும்பித் திரும்பி உனைப் பார்க்க விட்டு
பழகப் பழக நடை தளர விட்டு
ஏனோ ஏனோ என்னை தொடர விட்டு
குளிரக் குளிர நெஞ்சில் குடியமர்ந்தாய்

சிறுக சிறுக காதல் அரும்ப விட்டு
படர படர நெஞ்சில் மிதக்கவிட்டு
வளர வளர அன்பு நிறையவிட்டு
குலுங்க குலுக்க உனை சிரிக்கவிட்டு
ரசிக்க ரசிக்க என்னை தூண்டிவிட்டு
மானே/ தேனே/ என புலம்ப விட்டு
மயங்க மயங்க நான் துவளவிட்டு
இனிக்க இனிக்க நெஞ்சில் குடியமர்ந்தாய்

எழுதியவர் : பாத்திமாமலர் (2-Feb-18, 11:58 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 117

மேலே