நினைவில் உன்னோடு
பிறப்பு என்ற இறந்த காலத்தில் இருந்து கொண்டு
இறப்பு என்ற எதிர்காலத்தை
எதிர் நோக்கி செல்லும் வேளையில்
நான் உன்னோடு சேர்ந்து பயணிக்க ஆசை கொண்டேன்.
என் ஆசைகள் அனைத்தும் கனவாய் போக
நிஜத்தில் வாழ முடியாத
உன்னுடனான என் வாழ்வினை
நிழல்கள் தொடராத இரவில் கனவாக வாழ்கிறேன்..
உன்னோடு வாழ முடியவில்லை
என்றாலும் உன் நினைவுகளோடு என்றும் தொடரும் எந்தன் வாழ்க்கை பயணம்...