காதல்
நீலவானில் வெண்ணிலா
காணாது போனதேன்
சாபத்தால் தேய்ந்து போனதா
இல்லை கார்முகில்கள்
கவ்விக்கொண்டு போனதா
என்ற கற்பனை வரிகள்
கவிதை வடிவம் ஏற்க
எதிர் வீட்டில் மாடியில்
சாளரம் திறந்தது
தரிசனமும் கிடைத்தது
காணாமல் போன நிலவு .
நிலவு மங்கை என்னவள்