இறைவன்

அனைத்து உயிர்களிலும் இறைவன்
உறைந்துள்ளான்,
எனவே, பறவுயிர்க்கு தீங்கிழைப்பது
இறைவனுக்கு செய்த தீங்கு ஆகும்🙏
ஆண்டவன் முன் நாம் நிற்கும் போது
நம்மிடம் மனத்தூய்மையை மட்டுமே
எதிர் பார்க்கிறான்;வேறு எதையும்
கேட்பதில்லை,.
இறைவனை வழிபட மந்திரம் தெரியவில்லை; பாடத் தெரியவில்லை, என கவலை கொள்ள வேண்டாம்,
இறைவன் முன் நின்று மனமுருகி
வேண்டி கண்ணில் இரண்டு சொட்டு
கண்ணீர் சிந்தினால் போதும்;
அது கோடானு கோடி மந்திரங்களுக்கு ஈடாகும்!
மனம் ஒரு குரங்கு, அது அங்கிங்கென தாவிக் கொண்டே
இருக்கும், அதை ஓரிடத்தில் கட்டி வைப்பது இறை பக்தியே ஆகும்🙏இறைவன்
நம்மை படைக்கும் போதே நமக்கு வாழ்வதற்கு உண்டான அனைத்தும்
படைத்து விடுகிறான் !நாம் அதை தேடி சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளும் திறவுகோல்தான்இறைவழிபாடு😇

எழுதியவர் : பாலமுருகன் பாபு (6-Feb-18, 9:33 am)
Tanglish : iraivan
பார்வை : 64

மேலே