கண்ணாளா கல்யாணம் எப்போதடா

கைகோர்த்து மாலை தோறும் நடந்து நடந்து
கையும் காய்ந்து விட்டது
அந்தி நிலவும் எத்தனை முறை
வளர்ந்து வளர்ந்து தேய்ந்து விட்டது
கண்ணாளா கல்யாணம் எப்போதடா

வேலை கிடைக்க வேண்டாமா என் கண்ணாத்தா

எனக்கொரு காதலி ஏழு வண்ண வானவில் அழகி
கிழவி ஆகிவிடுவாள் அவசரம் ஒரு வேலை என்று சொல்லிப் பாரடா
மற்றவர்களுக்கெல்லாம் திருமணம் சொர்க்கத்தில்
நமக்குக் கல்யாணம் முதியோர் இல்லத்திலா ?
சற்று விரைந்து யோசியட என் ஆமைக் காதலா !

எழுதியவர் : கவின் சாரலன் (7-Feb-18, 10:22 pm)
பார்வை : 296

மேலே