தழைத்தவன் மட்டுமே

நல்ல உள்ளம் நம்மை நாடுகின்றது
நாடினால் நலம் பெற வாய்ப்பு உண்டு
நமக்குள் இருக்கும் வேற்றுமை
வெளியேறி விட்டால் உண்மை தலைவன்
உயர்ந்து நிற்க நல்வழியில் நாம்
நலிவின்றி தன்மானத்துடன்
வாழ நிச்சயமாய் வழியுண்டு

உண்மைக் குரல் ஓங்கித்தான்
பொங்கித்தான் வருகின்றது
இனியும் நாம் மடையராக முட்டாளாக
தாமதிக்க வேண்டுமா /
தடைகள் பல வென்று தான்
தனிமைக் குரல் கொடுக்கின்றான் தமிழன்
யாரெனத் தெரிந்து கொள்ள
நம் செவிகள் திறக்க மறுப்பதேன்
சீரழிந்த வாழ்க்கை இனியும் வேண்டாம்
செல்வோம் சிறப்பு மிக்க தலைவன் பின்னே

செந்தமிழ் சிந்தும் சொல் பிறழாத தமிழன்
எவரென காண்போம்
வழிவிடுவோம் வரவேற்போம்
படைப்போம் பகுத்தறிவுடன்
பண்புமிக்க ஆடசியாய்
கொள்வோம் நிம்மதி
சூழ்ச்சி இல்லா சுகம் காண
செல்வோம் நல்லவன் பின்னால்
நயவஞ்சகம் சற்றும் இல்லா
நல்ல உள்ளம் அதுவென காண்போம்

நம்பினார் கெடுவதில்லை
நம்பிக்கை தான் நல்வாழ்வில் நமைக் காக்கும்
தமிழன் அனைவரும் தலை நிமிர்ந்து வாழ
நல்ல தமிழனை தெரிந்து கொள்வோம்
எல்லாம் பட்டுத்தான் தெளிந்து விட்டான் தமிழன்
அறுகம் புல்லென அடர்ந்து படர்ந்து நின்றால்
நம்மை ஆட்கொள்ள எவனும் அஞ்சுவான்
தமிழன் தழைத்தவன் மட்டுமே
எதற்கும் சளைத்தவன் அல்ல

எழுதியவர் : பாத்திமாமலர் (10-Feb-18, 1:03 pm)
பார்வை : 154

மேலே