முதுமொழிக் காஞ்சி 25
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
நிறையச் செய்யாக் குறைவினை பழியார். 5
- பழியாப்பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
ஒருவினையை நிரம்பச் செய்யாதவர்க்கு முன் போய் அக்குறைவினையை யாவரும் பழியார்.
'செய்யாததற்கு முன்பே அக்குறை வினையை' என்றும்,
'செய்வதற்கு முன் செய்த குறைவினையை என்றும் பிரதிபேதம் உண்டு.
பதவுரை:
நிறைய செய்யா - நிரம்பச் செய்து முடிக்காத, குறைவினை - குறைவினையை,
பழியார் – எவரும் பழித்துரையார்.
முழுவதும் செய்துமுடியாத குறைவேலையக் கண்டு எவரும் பழித்தல் செய்யார். அவ்வேலை பின்னும் திருத்தமெய்தி நன்கு முடிதல் கூடுமாதலால் அறிவுடையோர் பழியார்.