தூயக்காதல்

ஊருக்கும் வீட்டுக்கும் 
பயந்து பயந்து 
மறைந்து மறைந்து 
சந்தித்துக்கொண்டோம் 
நானும் அவளும் 

இருந்தும் 
காதலை மறக்காமல் 
உறவாடி வந்தோம் 

அவள் இல்லாமல் நான் இல்லை 
நான் இல்லாமல் 
அவள் இல்லை 
என்று வெறும் வார்த்தைகளாய் 
இல்லாமல் 
உயிருக்கு உயிராய் 
உருகி உருகி 
ஒருவருக்குள் ஒருவர் 
ஊடுருவிச்சென்றோம் 

அவ்வப்போது
சில முத்தங்களோடு 
சில யுத்தங்களோடு
காதலை வளர்த்து வந்தோம் 

எங்களது காதல் 
எங்களது ஊருக்கும் வீட்டிற்கும் தெரியவந்தது 
எங்களிடையே
தற்காலிக பிரிவு வந்தது 

அந்த பிரிவுதான் 
எங்களது அன்பையும் 
காதலையும் 
பலமடங்கு பெருக்கி 
சக்தி வாய்ந்த
வீரியம் தந்தது 

இறுதியில் 
சாதியையும் மதத்தையும் தகர்த்தெறிந்து 
எங்களது தூய்மைக்காதல் துணிந்தெழுந்து வென்றது !

எழுதியவர் : சூரியன்வேதா (13-Feb-18, 6:19 pm)
பார்வை : 161

மேலே