உன்னால் முடியும்

உன் பிறப்பது சிறப்பென்று
இப் பார் சொல்ல வேண்டும்.★
வெறுப்பது களைந்து விருப்பது மிகுந்து வாழ்★
இறந்த பின் ஒருவரை புதைத்தால் ஓரிடம் நின்று
மண்ணாகி போவார்கள்★
அதுவே, எரித்திடும் போதில்
நீரிலும், நிலத்திலும், காற்றிலும் என பல நூறிடம்
சாம்பலாகி விரவியிருப்பார்★
நீ உனது கேடெண்ணம் உன்னில் புதைத்து, உன் சக்தி எரித்து சாம்பலாக்கி,
இப் பாருக்குதவி பரவியிருப்பாயாக★
ஊருக்குதவ சேவைக் கொடையனாய் முதலில்நில்★
கோழைகள் வரிசையில் கடையனாய் நில்★
சாலை போகும் சேலைகளுக்கு நூல் விடும் நீ;அதே சாலையில் விபத்தென்றால் வால் சுருட்டி மறைகிறாய்★
செயலொன்று உன்னால்
முடியும் என்றறிந்தும்
செயல்படாதது முறையா?
கயல் விழி காண காத்திருக்காது, இப்புவி செழிக்க புயலாய் புறப்படு👍

எழுதியவர் : பாலமுருகன்பாபு (18-Feb-18, 10:17 am)
Tanglish : unnaal mudiyum
பார்வை : 172

மேலே