நிலவு மறைந்தது
கொவ்வை இதழால் என்னைச் சிதைத்தாள்
கொஞ்சும் மொழியால் மனதை வதைத்தாள்
கருவண்டுக் கண்களால் அவள் கதைத்தாள்
உருவத்தில் நறுமலர்ச் சோலையை மிகைத்தாள்
பருவத்தின் ஆசையை என்னில் மிக விதைத்தாள்
பாலோடு தேனையும் சர்க்கரையும்
பாகோடு மா பலா வாழை முக்கனிகளையும்
சேர்ந்துண்ட மயக்கத்தை
சில நொடிகளில் எனக்குத் தந்து
முழு நிலவாய் அவள் மறைந்து போனாள்
ஆக்கம்
அஷ்ரப் அலி