கேள்வியும் பதிலும்
எதிரே இருக்கும் வீட்டுக்குள்
....எப்படி வந்தது தங்கச்சிலை ?
புதிரின் விளக்கம் பிறகறிந்தேன்
.....பார்த்தது குமரி நின்றநிலை
இருசெவி கேட்கும் ஒலியெல்லாம்
.....இசையாய் இன்று மாறியதேன் ?
கருமுகிற் குழலி இன்மொழிகள்
....காலையில் என்னிடம் கூறியதால்.
செய்யும் செயல்கள் அனைத்திலுமே
.....சிறப்பு இன்று கூடியதேன் ?
மைவிழிப் பாவையின் பார்வையாம்
....மாலையைக் காலையில் சூடியதால்.
எதையும் வெல்ல முடியுமென்னும்
....எண்ணம் வந்தது எப்பொழுது ?
இதழின் ஓரப் புன்னகையால்
....இதயம் அவள்தொட்ட அப்பொழுது