வேறொன்றைக் கேட்ட பொழுதே கெடும் - நீதி வெண்பா 83

நேரிசை வெண்பா

கற்றைக் குழலார் கவினெல்லாம் ஓர்மகவைப்
பெற்றக் கணமே பிரியுமே - கற்றருளை
வேட்ட பெரியோர் பெருமையெலாம் வேறொன்றைக்
கேட்ட பொழுதே கெடும். 83 நீதி வெண்பா

பொருளுரை:

நிறைந்த கூந்தலையுடைய பெண்களின் அழகு முழுவதும் ஒரு குழந்தையைப் பெற்ற அப்பொழுதே நீங்கும்; அதுபோல, ஞானநூல்களைப் படித்து கடவுளுடைய திருவருளை விரும்பிய ஞானிகளுடைய பெருமை முழுவதும், அவ்வருளல்லாத வேறாகிய உலக வாழ்க்கையைக் கேட்டவுடனே அழியும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Feb-18, 9:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 66

சிறந்த கட்டுரைகள்

மேலே