வேறொன்றைக் கேட்ட பொழுதே கெடும் - நீதி வெண்பா 83
நேரிசை வெண்பா
கற்றைக் குழலார் கவினெல்லாம் ஓர்மகவைப்
பெற்றக் கணமே பிரியுமே - கற்றருளை
வேட்ட பெரியோர் பெருமையெலாம் வேறொன்றைக்
கேட்ட பொழுதே கெடும். 83 நீதி வெண்பா
பொருளுரை:
நிறைந்த கூந்தலையுடைய பெண்களின் அழகு முழுவதும் ஒரு குழந்தையைப் பெற்ற அப்பொழுதே நீங்கும்; அதுபோல, ஞானநூல்களைப் படித்து கடவுளுடைய திருவருளை விரும்பிய ஞானிகளுடைய பெருமை முழுவதும், அவ்வருளல்லாத வேறாகிய உலக வாழ்க்கையைக் கேட்டவுடனே அழியும்.