மனிதநேயம் உதவலையே
ஒருமித்து வாழ
உதேசித்தது போல
அன்புதான் தெய்வமென
அழகாக சொல்லிவச்சு
தன்னைபோல் பிறரையும்
தரம் குறையாம
மதிக்க சொல்லி—அதனை
மனிதநேயம் என்றனர்
மனித நேயத்தின்
புனித குறிக்கோள்
மனிதனை மனிதனாக
மதித்து நடப்பதும்,
மானிட இனத்தின்
வாழ்வுக்கும், உரிமைக்கும்
குரல் கொடுத்து
உயர்வடையச் செய்வதாகும்
சமூக அக்கறை
சகலத்துக்கும் அடிப்படை,
அதை மேம்படுத்த
அனைவரும் முயன்று
வேற்றுமை மறந்து
ஒற்றுமையாய் வாழ
வழிகாட்ட வேண்டும்
விதைத்தால் விருட்சம் தான்
அதனை மறந்து
அன்பே சிவமெனக் கூறி
அக்கறை ஏதுமின்றி
ஒரு தாய் மக்களென
உறக்கக் கூறினாலும்
அனைவரும் ஒன்றுபோல
அமைதியாய் உயிர் வாழ
மனிதநேயம் உதவலையே!