உனக்கு பின்
உன் குறித்த
தகவல்கள் எதுவுமில்லை
நீ தொலைத்த
நாட்கள் பற்றியும்...
உன் மிச்சங்கள்
அமைதியாக சென்றன.
கடும் சேகரிப்புகள்
இன்னும்
பரணிலிருந்து எடுக்கவில்லை....
விலை படிந்தால்
அதுவும் கூடும்...
மிக்க மகிழ்ச்சி
சென்று வருக....
உன் கர்வமும் சுயமுனைப்பும் இடும்
நடுநிசி ஊளை மட்டுமே
கடும் துயரம்....