மனித மனம்

என்றும் அமைதியாக இருக்கும் உன் நிமிடங்களே பிறரின் பரிகாசங்களுக்காய் விலை போவதை ஒத்திகை செய்கிறது..!
என்னால் உணரமுடிகிறது.., ஒவ்வொருவரின் முகத்திரைகளும்..,
வெற்றுச் சிரிப்புகளும்..,
அவற்றால் நொந்துபோன என் இதயமும்..!
இன்று போலிச்சிரிப்போடு மட்டும் நின்று போவதில்லை மனிதமனங்கள்..,
முகத்தோடு ஒன்றிப்போன முகமூடிகளோடேதான் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறது..!
மனிதமே,எங்கே சென்றது நம் முன்னோர் விட்டுச் சென்ற பண்புகளும் பதுமையை மதிக்கும் முறைகளும்..!
சாளரத்தின் வழி தோன்றும் நிலவையும் எட்டிப்பிடிக்க நினைக்கும் உன் எண்ணங்களுக்குப் புரிய வை,
நீ நினைப்பது உண்மையை அல்ல..,
உருவகத்தின் விளிம்பை...!
நீ பருக நினைப்பது கடல் நீர் அன்று..,கானல்நீர்..!
உருவங்களும் பிறர் மீதான உன் எண்ணங்களும் பிரிதொரு
மாற்றுக்கருத்துகளும்,
உன் மீதும் பிறரால் தோன்றப்பட சிலகணங்கள் ஆகிவிடாது..!
உண்மைகளின் சுவடுகளோடு வாழ்ந்துவிட்டுப் போ...!,
திரும்பத்திரும்ப உன்னை சுமக்க புவியும் தவமிருக்கும்..!

எழுதியவர் : சரண்யா (25-Feb-18, 7:48 am)
Tanglish : manitha manam
பார்வை : 433

மேலே