குரல்

ஒலித்தல் என்று
மாறிப்போனேன்...
நினைவுச்சவ்வுகள்
சொற்களின் நிறம்
கொண்டு
காலங்களை தொகுத்தன.
விடுபட்ட குரல்கள்
சப்தம் கௌவி வனதிசை
நோக்கி புரண்டன.
மெய்மையின் கூற்றுக்கள் பிளந்து
ஞானக்கூச்சலாய்
உயிரில் கவிந்தன.
மர்மத்தின் கூக்குரல்
தேசமெங்கும் ஊடுருவ
சித்தம் பற்றினேன்
உன் ஒருவனுக்காக...

எழுதியவர் : ஸ்பரிசன் (26-Feb-18, 2:55 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : kural
பார்வை : 109

மேலே