சிரியாவில் சிதையுண்டது மனிதமும்

-------------------------------------------

​ஆய்ந்திட வரவில்லை நான்
காரணம் என்னவென்று !
சாய்ந்து கிடப்பதை கண்டதும்
நின்றது ஒருநொடி இதயம் !

இயற்கையின் சீற்றமெனில்
தடுக்க முடியாது !
கொலைவெறி தாக்குதலால்
குலையும் நடுங்குது !

வீழ்ந்திருப்பது உயிர்களல்ல
பச்சிளம் தளிர்களன்றோ !
மாண்டது மழலைகளல்ல
மரணித்தது மனிதமன்றோ !

உள்நாட்டுப் போரானாலும்
உயிரிழந்தது உறவுகளன்றோ !
பதவியெனும் கொடுவாளால்
பறிபோனது உயிர்களன்றோ !

சிரியா என்பதால் அங்கே
சிறிதானதோ இதயமும் !
அரியாசன ஆசைக்காக
அழிக்கலாமா இனத்தையே !

பாவமென்ன செய்தனர்
படுகொலைக்கு ஆளானர் !
பால்வடியும் முகங்களை
​பாவிகள் கொன்றனரே !

சிதறியுள்ள உடல்களால்
சிதையுண்டது மனிதமும் !
அழித்திட ​பகைமையை
​வழிகாண்பவரே வல்லவர் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (26-Feb-18, 11:00 pm)
பார்வை : 201

மேலே