அன்பு இல்லம்

௩௦௦ நாட்கள்
கருவறை இருளில்
இருந்த - எனக்கு
இனி
வாழ்வே இருளில் - தான்
என்று தெரியவில்லை............
௩௦௦ நாட்கள்
சுமந்த - என்
தாயிக்கு - என்னை
அணைக்க
ஒரு நிமிடல் கூட
இல்லையா?
தாயே!
உன் வயிற்றில்
இருந்த வரை
நீ! - என்று
முத்தமிடுவாய்.......................!
என்றிருந்தேன்......................!
ஆனால்,
என்னை
முத்தமிட்டதோ!!!
சில
குப்பை தொட்டி -தான்
எனக்கு
என்ன
பெயர்
வைக்கலாம் - என்று
யோசித்தயோ?
இல்லையோ ?
ஆனால்,
எனக்காக - காந்திருந்தது
அனாதை
என்னும்
அழகிய பெயர் .

எழுதியவர் : சுகன்யா (28-Feb-18, 7:49 pm)
Tanglish : anbu illam
பார்வை : 201

மேலே