பாதை மீது பாதரஸ மௌனம்

என் குடைக்குள்
உனக்கு இடமுண்டு.
காட்டுப்பூக்களின்
மணம் அலையும்
வெண்நிறச் சாலையில்
சாரல் சிதறலில்
நாம் நடக்கிறோம்.
பேச்சற்ற தொடர்பில்
பாதங்கள் தடுமாற
நீள்தொலைவில்
கண்கள் தொக்கியபடி
உருளும் மௌனத்தை
யார் உடைப்போம்
என்பதும் அறியாமல்...
எண்ணியபடி வருகிறேன்,
வாக்கியங்கள் இல்லாத
தாள் முழுக்க
நீ போட்டு வரும்
முற்றுப்புள்ளிகளை...

எழுதியவர் : ஸ்பரிசன் (2-Mar-18, 7:37 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 103

மேலே