என் இதயத்தை கேட்டுப்பார்

உந்தன் இதழ்களில்
ஒட்டிய சிவந்த சாயத்தின்
வாசத்தை கேட்டுப்பார் அது
உன் மேல் நான்கொண்ட
காதலை சொல்லும்...

உந்தன் விழிகளில்
குளிர்ச்சி காற்றை அள்ளி
பூசும் கண்மையை கேட்டுப்பார்
அது என் காதலை சொல்லும்...

உன் வெட்டிய கூந்தலோடு
உறவாடும் ஜன்னலோர
காற்றை கேட்டுப்பார்
அது என் காதலை சொல்லும்...

உன் பாதங்களின்
அழகை கூட்டும்
மருதாணியின் ஈரத்தை
கேட்டுப்பார்
அது என் காதலை சொல்லும்

உன்னோடு
கொஞ்சி விளையாடும்
உன் வீட்டு
வெள்ளை நாய்குட்டியை
கேட்டுப்பார்
அது என் காதலை சொல்லும்

ஏன் இவ்வளவு
ஒரே ஒருமுறை என்
இதயத்துடிப்பை கேட்டுப்பார்
அது உன் பேரையே
சொல்லி துதிக்கும்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (3-Mar-18, 9:50 am)
பார்வை : 1126

மேலே