மரம், காற்று
எதையோ சொல்ல வந்ததோ?
முளைத்தது மரம் –
வளர்ந்த பின்னே பேசுவதில்லை
தன் வேலையைச் செய்கிறது
நிகழ்ந்த நன்மை போல அது நிமிர்ந்து நின்றது
நாம் மரத்தை பார்கிறோம்
நம்மை நாம் பார்த்துக் கொள்வதில்லை –
காற்று வந்து மரத்தை ஸ்பரிசித்தது
மரம் தன் ரகசியத்தை கூறிவிட்டது
அந்த காற்று தான் நம் எல்லோர் மீதும் வீசுது
ஆயினும் தெரியவேண்டியது நமக்கு தெரிவதில்லை
நம்மில் நாம் சரியாக இயங்குவதில்லை –
மரத்துக்கும், காற்றுக்கும் லட்சிய்ங்கள் கிடையாது
லட்சணங்கள் தான் இருக்கும்
மரத்துக்கும், காற்றுக்கும் வரைமுறைகள் கிடயாது
விளவுகள் தான் இருக்கும்
மொழிகளுக்கு எட்டாத கவித்துவம் உண்டு
நாம் அதை புரிந்துகொள்ள வேண்டும்
நாம் அதை சுவைத்துவிட வேண்டும்