அன்புத்தோழியே

நீ
கிருஷ்ணாவின் கிளியா!
இல்லை
கிளியாபட்ராவின்
நகலா………..!

ராசியின் முதலானவள் – நீ
நட்சத்திரத்தின்
தலைவியும் நீ!

உன்
பார்வைகள் பல
நின்
பாவையுரைத்த
பண்புகள் பல…………

கனியென உரைப்பாய்
மாறாவிடில் அழகாய்
கர்ஜிக்கவும்
செய்வாய்!

தடம் மாறயில
தட்டிக் கேட்டாய்
தடுமாறயில்
தாங்கிப் பிடித்தாய்!

விரும்பாததையும்
நான்
விரும்ப விரும்பிச் செய்தாய்………..

என்
விடியல் நீயானாய்!
விழிக்கும் இரவும்
நீயானாய்………..!!!

துன்பம் போக்கியே
நன்மை விளைவித்தாய்!
உன்
நிலையைக் கருதாது - என்
நட்புக்காய் துடிதுடித்தாய்!

உன்
விழிக் கசிந்தால்
என்
இதயம் தாங்காது!
நீயிருக்கையில் என்
விழியும் என்றும் கலங்காது…………!!
Dedicate to my "கண்ணம்மா"!

எழுதியவர் : புவபாரதி (5-Mar-18, 1:36 pm)
பார்வை : 1368

மேலே