மயக்கும் மதி முகமே🌝

பிள்ளை தமிழ் பேசி, கிள்ளை மொழியில் கொஞ்சும், தென்னம் பாளையில் பிறந்த கள்ளமுதாய் இனிப்பவளே,
உனை நினைக்கும் போதே ஓர் போதை ஏறுதடி,பாதை வான் நோக்கி மாறுதடி, பேதை உனை கொஞ்சமாய்
கொஞ்ச தோணுதடி,
வாதை எனை நஞ்சாய் வதைக்குதடி,
கோதை உன் நினைவு சஞ்சலமாய் கொல்லுதடி, காதை உன் உடலெழுத கை விரல் தவிக்குதடி,
மாதுனை எண்ணி எண்ணி மனம் மயங்குதடி,
மாதுளை சிரிப்பு விட்டகல நெஞ்சு தயங்குதடி,
மதி ஒளியில் மதி மயங்கி மல்லாந்து கிடக்கிறேன்🌕

எழுதியவர் : பாலமுருகன்பாபு (6-Mar-18, 11:39 pm)
சேர்த்தது : BABUSHOBHA
பார்வை : 165

மேலே