இலையுதிர்காலம்

இலையுதிர் காலம் ::
----------
காலம் மாறுது
என் கனவும் கரையுது..
என் வாழ்வும் சிதையுது-உன்னால் வசந்தமும் இலையுதிரானது....
கண்சிமிட்டி நிக்கையிலே காதல்வலை வீசினியே!!!
வாடக்காத்து வீசுனப்போ வாசல் வந்து நின்னியே!!!
நேத்து நீ பேசிப்போனத நான் நெனச்சுப்பாக்கையிலே-என் நெஞ்சாங்கூடது நொறுங்கித்தான் போயிடுச்சு!!!
களத்துமேட்டுல கால்கடுக்க நிப்பேன்-கஞ்சிக் கொண்டு நீ வரத கண்டு ரசிப்பேன்னு -கண்ட கனவ WhatsApp ல அனுப்புனியே!!
ரோசாப்பூ மாலைமாத்தி -ராசா நீ எனக்கு தாலி கட்டுறத Facebook ல போடுவேனு சொன்னியே!!!
தேர்த்திருவிழால தேவத உன்ன நான் தேடி அலைஞ்சேனு telegram ல சொன்னியே!!
இஞ்சி இடுப்பழகி ,எலுமிச்சை நிறத்தழகி-வஞ்சி நீ வந்தா தான் என் வாழ்க்கை சிறக்கும்னு Instagram ல வசனம் நீ பேசினியே!!
அந்தி மாலையில ஆயிரம்கதைப்பேச, ஆண்டு பல நீ என் கூட வாழனும்னு email அனுப்பினத எப்படிதான் மறந்தியோ!!
நாம சந்திக்க முடியாதப்போ என்னால சிந்திக்கக்கூட முடியலனு அடுக்குமொழி பேசியத அடியோடு மறந்ததென்ன என் மச்சானே!!
கரும்பு தோட்டத்துல கண்டுங்காணாம கதநூறு பேசுனதெல்லாம் கானல் நீரா மச்சானே!! உன்னக்காணம
எலும்பும் துரும்புமா ஏங்கிக்கிடக்குறேன்..
எச்சிமுழுங்காம வாடிவதங்குறேன்...
பச்சத்தண்ணீ பல்லுப்படாம பறந்து திரியுறேன்...
நான் உன்ன நினைச்சு காத்துக்கிடக்குறேன்-சேதி ஏதும் நீ சொன்னா வாழ விரும்புறேன்,
கண்டுக்காம நீ இருந்தா செத்துமடியுவேன்-சேந்துவாழ ஆசப்பட்டா Twitter ல நீ போடு -இல்லனா என் சாவ YouTube ல நீ போட்டுப்பாரு....

எழுதியவர் : இரா.சுடர்விழி (9-Mar-18, 4:41 pm)
பார்வை : 118

மேலே