அழகிய மொட்டே

அவிழத் துடிக்கும் அழகிய மொட்டே !
***அடுக்கி வைத்த இதழ்களை விரிப்பாய் !
குவிந்து நீயும் கும்பிடும் கைபோல்
***கோல வடிவாய் விளங்கிடு மெழிலைக்
கவிதை செய்வேன் படித்ததை மகிழ்வாய் !
***கதிரின் வரவில் கவினுற மலர்வாய் !
தவித்து வந்த வண்டதன் தாகம்
***தணிக்க மதுவை வழங்கிடு வாயே !!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (14-Mar-18, 11:52 pm)
பார்வை : 107

மேலே