என்னிடம் வந்துவிடு கண்ணே

போதும் இந்த விளையாட்டு
எத்தனை நாளைக்கு
போதும் இந்த கண்ணாமூச்சி
எவ்வளவு நாளைக்கு

போதும் இந்த தூரம்
என்னால் தாங்காது
போதும் இந்த இடைவெளி
இனிவிழி தூங்காது

போதும் இந்த நாடகங்கள்
எல்லாம் வெளிவேடங்கள்
போதும் இந்த நடிப்புகள்
எப்படியும் முடிவுறவேண்டும்

போதும் இந்த ஏக்கங்கள்
துடிக்கிறது மனசு
போதும் அதன் தாக்கங்கள்
எரிகிறது அணுக்கள்
போதும் இந்த தவிப்பு
தகிக்கிறது தேகம்
போதும் இந்த துடிப்பு
சுடுகிறது மூச்சு
போதும் இந்த இரைச்சல்
தேடுகிறது அமைதி
போதும் இந்த குழப்பங்கள்
விரும்புகிறது பதிலை
போதும் இந்த சத்தங்கள்
வேண்டுது முத்தங்கள்
போதும் இந்த புலம்பல்கள்
வேண்டும் உன் பிரியம்
போதும் என் அழுகை
வேண்டும் உன் அன்பு
போதும் என் ஆற்றாமைகள்
வேண்டும் உன் அருகாமை
போதும் என் அலைக்கழிப்புகள்
வேண்டும் உன் ஆசைப்பார்வை
போதும் என் கண்ணீர்
நிஜமாக்கு என் கனவுகள்
போதும் என் கவிதைகள்
பாடிடு என்னோடு கானங்கள்
போதும் என் தனிமைகள்
துணையாகிடு என் இதயத்தோடு
போதும் இந்த நலம்விசாரித்தல்கள்
நீயின்றி நான் எப்போதும் நலமாய் இருப்பதில்லை
போதும் இந்த எதிர்பார்ப்புகள்
நின்னை தேடி தேடி தவிப்பது கொடுமையிலும் கொடுமை
போதும் இந்த ஏமாற்றங்கள்
தாங்காது தனியே பேசியே கழிகிறது என் காலங்கள்
போதும் இந்த குறுஞ்செய்திகள்
பேசிட பெருஞ்செய்திகள் என்னிடம் எப்போதும் உண்டு
போதும் இந்த அலைபேசி பேச்சுக்கள்
அலையெனவே அழகாக வந்து பின் ஓடி விடுகிறாய்

போதும் இந்த நாடகங்கள்
இதயம் தனில் இறங்கி கலந்திடு
இணையாக என்னோடு இருந்துவிடு
இனியும் தூரங்கள் வேண்டாம் வந்துவிடு
என்னிடம் வந்துவிடு கண்ணே!!!

எழுதியவர் : யாழினி வளன் (16-Mar-18, 2:08 am)
சேர்த்தது : யாழினி வளன்
பார்வை : 294

மேலே