மங்கையின் கோபம்

மங்கையின் கோபம்

மாடத்தில் கண்ட அந்த மடந்தை
மயக்கத்தை தந்த அந்த நங்கை
மாலை வெயிலின் நிறமொத்த மங்கை
மார்கழி பனிபோல் மனதில் படர்ந்த அந்த கங்கை
மலர்களின் மென்மை கொண்ட ஆரணங்கை
கார்மேக கூந்தல் அணிந்த கன்னிகை
குளிர்நிலவின் முகமுடைய வனிதை
குற்றால அருவிபோல் சிரிக்கும் தேவதை
கதிரவன் வெம்மை கதிரை தொடுத்த
காரணத்தை அறியாமல் கதறுகிறேன்
தனிமையிலே !!!!

எழுதியவர் : கே என் ராம் (16-Mar-18, 8:29 pm)
பார்வை : 59

மேலே