இலையே இலையே

இலையே இலையே
----------------------------------

இறந்து விழுந்தாயோ இலையே
விழுந்து இறந்தாயோ

நிழலை தந்தவனே  நீயுமின்று
நிழலைக் கண்டாயோ

பசித்த பசுவைப்பார்த்து இரங்கி
பதறி விழுந்தாயோ

அழகு பெண்ணவள் கூந்தலில் மயங்கி
அதன்மேல் விழுந்தாயோ

பிறந்த நாள்முதல் உழைத்தாய்
அதனை யாருமறிவாரோ

காற்றுடன் பகைத்து போரிட்டு பின்னே
தோற்று விழுந்தாயோ

வேருந்தன் உறவே அதற்கே உதவ
உரமென விழுந்தாயோ

இறைவனைத் தேடியே எனைப்போல் நீயும்
மண்மேல் வந்தாயோ

பற்றதை விட்டிட சொன்னார் கடவுள்

அதனால் விழுந்தாயோ

- சுரேஷ் ஸ்ரீனிவாசன்.

எழுதியவர் : சுரேஷ் ஸ்ரீனிவாசன் (18-Mar-18, 7:06 am)
பார்வை : 68

மேலே