காதல்

புன்னகைப் பூத்தாள்
மலரும் மல்லிகையாய்
கோல விழிகளால் ஒரு
பார்வை தொடுத்தாள்
மலர் அம்பாய் என் மனதில்
தைத்து நின்றாள்
பேசும் பொற்பாவையாய்
என்னருகில் வந்து நின்றாள்
தேன்மொழியாள் தீந்தமிழில்
என் காதில் வந்து காதல்
மந்திரங்கள் சாமமென
பாடி மொழிந்தாள் என்
உள்ளத்தைக் கவர்ந்தாள்
அவள் அழகில் நான் மயங்கி
சிலையாய் நின்றேன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Mar-18, 1:17 pm)
Tanglish : kaadhal
பார்வை : 72

மேலே