நம்பியின் சொல்

அலை
அலைமேல் அலை
அலைகிறது அலை

கட்டுமரங்கள் மேல்
மீனவர்கள்

கடல்
இசைக்கும் ராகம்

சூரியோதயம்
சந்திரோதயம்

தாய்தயவில்
தெற்குக் கடைசியில்.

இவன் கனவில்
அடிக்கடி
ஒயில் பெண்கள்

நிறைய தரம்
புதையல்

அபூர்வமாய்
மழை

ஒவ்வொரு நேரம்
பௌர்ணமி நிலா

சிலசமயம்
மலையருவி

எப்போதாவது
இராட்ஷஸன்

நேற்று
நீலவானம்

முந்தா நாள்
நீ

ஒரே
ஒரு தடவை கடவுள்



சாயைகள்
வெற்றி
பெற்றவனும் புலம்புகின்றான் தனிமையில்

ஏன்
சும்மாவா வரும் வெற்றி

சுமந்தாலும்
வருமா வெற்றி

ஒரு
பெரும் நித்திரை

இரவில்
வரும் கனவு

சூடிச்சூடி
சூடச்சூட

வெட்டவெளி
பொட்டல் நிஜமில்லையோ

விக்ரமாதித்யன் நம்பி கவிதைகள்

எழுதியவர் : (20-Mar-18, 9:10 am)
பார்வை : 43

மேலே