வலியின் சுவை

உன் வசீகரப் பாதங்கள்
சிறு குழந்தையாய் மாறி
என் நெஞ்சில் இடைவிடாது
உதைத்த வண்ணமிருக்கின்றன
காதல் சுக வேதனையில்
நான் தவித்து மகிழ்கிறேன் ,
வரிகளுக்குள் சிக்காமால்
வஞ்சிக்கும் வார்த்தைகள்
அழகிய சொல்லாடலாய் வந்து
நினையாப் பொருட்டாய்
கவிதைக்குள் நுழைதல் கண்டு
ஆர்ப்பரிக்கும் கவிஞனாய்,
உதைக்கும் குழந்தையை
அணைக்கும் நாளை
எண்ணி எண்ணி

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (21-Mar-18, 1:23 pm)
Tanglish : valiyin suvai
பார்வை : 150

மேலே