பிச்சைக்காரனின் சைவத்துவம்
தெருவோர பிச்சைக்காரனிடம்
கோழிப் பிரியாணியைக் கொடுத்தேன்
நான் சைவம் வேண்டாம் என்றான்
பசித்தவனுக்கு சைவம் என்ன அசைவம் என்ன
கிடைத்ததைப் புசிக்க வேண்டியதுதானே என்றேன்
வாழ்க்கை வயிற்றை பொருத்தது மட்டுமல்ல
மனதை உணர்வைப் பொருத்தது என்றான்
நான் சிந்திக்கத் துவங்கினேன் !